உலகின் மிகவும் இலகு ரக போர் விமானமும், இந்தியாவின் சொந்தத் தயாரிப்புமான ‛தேஜஸ்' விமானங்களைக் கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய ஊடகமொன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா, எகிப்து ஆகிய நாடுகள் இந்த போர் விமானத்தைக் கொள்வனவு செய்ய விருப்பம் காண்பித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தயாரிப்பு விமானத்தை (ஜே.எப்-17) ஸ்ரீலங்கா அரசாங்கமும், பிரான்ஸ் தயாரிப்பு (24 ரபேல்) விமானத்தை எகிப்தும் கொள்வனவு செய்ய தீர்மானித்திருந்தன.
எனினும் இறுதிநேரத்தில் இந்தத் தீர்மானத்தை குறித்த நாடுகள் மாற்றிக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களைத் தற்போதைய வடிவத்திலேயே பெறுவதற்கு ஸ்ரீலங்காவும், எகிப்தும் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் மேலும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானிலிருந்து ஜே.எப்-17 ரக போர் விமானத்தை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா தீர்மானித்திருந்த போதிலும், இந்திய அரசின் உயர்மட்டத்திலிருந்து விடுத்த அழுத்தங்களுக்கு மத்தியில் தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்தத் தகவல்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment