கண்டி உடஹேவாஹெட பிரதேசத்தில் புதிதாக திருமணமாகி மணமகனின் வீட்டுக்கு வந்திருந்த மணமகள், அன்றைய தினம் இரவே தனது முன்னாள் காதலனு டன் தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி இரு வீட்டாரின் ஏற்பாட்டில் இத் திருமணம் இடம்பெற்றிருந்தது.சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த மணமக்களுக்கு முதலிரவு ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
அவ்வாறு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அறையினுள் மணமகன் சென்று பார்த்த போது அங்கு மணமகள் இருக்கவில்லை. எனினும் அவர் வந்து விடுவாள் என மணமகன் சிறிது நேரம் காத்திருந்துள்ளார்.
வெகுநேரமாகியும் மணமகள் வராததால் சந்தேகம் கொண்ட மணமகன் இவ்விடயம் தொடர்பில் வீட்டாருக்கு தெரிவித்து விட்டு வீடு முழுவதும் தேடியும் காணப்படவில்லை.
சற்று நேரத்துக்கு முன்பாக குறித்த வீட்டினருகில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்று புறப்பட்டு சென்றிருந்தததுடன் மணமகள் அதில் சென்றிருக்கலாம் என வீட்டார் சந்தேகித்துள்ளனர்.
மணமகள் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருப்பாரோ என்ற சந்தேகத்தில் பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் தங்களது மகள் இங்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
மணமகளின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் எவ்வித பதிலும் கிடைத்திருக்கவில்லை.
எனினும் சிறிது நேரத்தின் பின் குறித்த பெண் தனது பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இங்கு சந்தோசமாக இருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்த இரு வீட்டாரும் விரைந்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்ததோடு பெண்ணின் பெற்றோர் தனது மகளுக்கு தொலைபேசியினூடாக அழைப்பு விடுத்து இப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்திருந்தனர்.
அவரும் அதற்கிணங்க அவர்கள் குறிப்பிட்ட தினத்தில் பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அவரின் வருகைக்காக இருதரப்பினரும் நாள் முழுவதும் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த போதும் அங்கு வரவில்லை.
பின்னர் இப் பெண் தனது முன்னாள் காதலனுடன் சென்றுள்ளார் என்பதனை விசாரணைகளின் மூலம் அறிந்த கொண்ட பொலிஸார் மணப் பெண்ணை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment